 |
|
மூல எழுத்தாளர்: தெரியவில்லை மீள எழுதியது: உதயன் |
முன்னொரு காலத்தில், ஒரு பழைய வீட்டில், பல எலிகள் அவ்வீட்டின் பரணிலும், சுவர்களில் உள்ள பல துவாரங்களுக்குள்ளும் வாழ்ந்து வந்தன. 1 |
அவைகள் அங்கேயிருந்தும் இங்கேயிருந்தும் கிடைக்கும் உணவையெல்லாம் கொணர்ந்து தங்களுக்குள் பகிர்ந்துண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தன. 2 |
அப்படி அனைத்து எலிகளும் மகிழ்ச்சியாக இருக்கும்போது ஒரு நாள், எங்கிருந்தோ ஒரு பூனை அந்த வீட்டிற்குள் எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தது. 3 |
அந்த வீட்டில் உள்ளவர்களும் பூனையை தங்கள் வீட்டிற்கு அன்புடன் வரவேற்று தங்க அனுமதித்தனர். 4 |
வீட்டில் அங்கும் இங்கும் எலிகள் ஓடித்திரிவதைக்கண்டதும், அந்த பூனை “ஆஹா! எங்கும் உணவு,” என்று நினைத்துவிட்டு, நிரந்தரமாக அவ்வீட்டிலேயே வாழ தீர்மானித்தது. 5 |
அது இரவென்றோ பகலென்றோ பாராமல் சத்தமின்றி நடந்து தனது கையில் அகப்பட்ட எலிகளுக்கெல்லாம் தொல்லை கொடுத்தது. 6 |
பூனையின் தொல்லைகள் அதிகரிப்பதைக்கண்ட, எலிகள் அனைத்தும் ஒரு நாள் கூடி என்ன செய்வது என்று விவாதித்தன. 7 |
அவைகள் எல்லாம் அன்று இரவு பகலாக அந்த பூனையை எப்படி இல்லாது ஒழிப்பது என்று விவாதித்தன. 8 |
குழுவில் இருந்த ஒரு எலி சொன்னது: “இரவென்றோ பகலென்றோ பார்க்காமல் பூனை எங்களை வேட்டையாடுகிறது. அதற்கு ஒரு முடிவு தேவை.” 9 |
அப்போது மற்றொரு எலி சொன்னது: “ஆமாம். அது சரி தான். பூனை சத்தமில்லாமல் வருவதன் காரணமாக, நமக்கு ஓடி தப்பிக்க நேரம் இல்லாமல் போகின்றது.” 10 |
இது கேட்டதும் மற்றொரு எலி சொன்னது: “நமக்கு பூனை வரும் சத்தம் கேட்டால் நன்றாக இருக்கும். அப்போது நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ள எமக்கு நேரம் கிடைக்கும்.” 11 |
ஒரு சிறிய எலி, “பூனை எப்பொழுதும் நம்மை துரத்துகிறது. குதித்து ஒரே மூச்சில் பிடிக்கிறது,” என்று அழுதது. 12 |
எனவே, அன்று எலிகளுடைய விவாதம் பூனை வருவதை அறிவதற்கு ஏதேனும் ஒரு வழி கண்டுபிடிப்பதிலேயே இருந்தது. 13 |
எல்லா எலிகளும் பல கருத்துக்களை தெரிவித்தன. 14 |
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு சிறிய எலி சொன்னது: “நாங்கள் பூனையின் கழுத்திலே ஒரு மணி கட்டினால், பூனை வரும்போதெல்லாம் மணி சத்தம் கேட்கும். நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளலாம்.” 15 |
இந்தக்கருத்தை எல்லா எலிகளும் விரும்பி ஆதரித்தன. பின்னர் அவைகளின் விவாதம் பூனைக்கு எப்படி மணி கட்டுவது என்பதே. 16 |
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு எலி சொன்னது: “எப்பொழுதும் மதியம் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு பூனை தூங்கும். நாங்கள் அந்த நேரம் போய் மணியை கட்டலாம்.” 17 |
வழமைபோல, இந்தக்கருத்தையும் எல்லா எலிகளும் விரும்பி ஆதரித்தன. 18 |
அப்போதுதான் அந்தக்குழுவில் இருந்த வயதான எலியொன்று எல்லா எலிகளிடமும் கேட்டது: “பூனைக்கு மணி கட்டுவது மிகவும் நல்ல விடயம். ஆனால் யார் கட்டுவது?” 19 |
இதைக்கேட்டதும் எல்லா எலிகளும் ஒன்றையொன்று பார்த்து கேட்டன: “பூனைக்கு மணி கட்டுவது யார்? பூனைக்கு மணி கட்டுவது யார்?”. 20 |
அந்தக்கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. எல்லா எலிகளும் முணுமுணுத்தன. அதற்கு யாரும் தயாராக இல்லை. 21 |
யோசனை கொடுத்த குட்டி எலியும் பூனைக்கு மணிகட்ட தயாராக இல்லை. 22 |
இதனால் பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வியுடன் எல்லா எலிகளும் மெல்ல சத்தமின்றி அவ்விடத்தை விட்டு நழுவிப்போயின. 23 |
இன்றுவரை, ஒரு எலி பூனைக்கு மணி கட்டிவிட்டது என்று யாரும் கேள்விப்பட்டதே இல்லை. 24 |
எலிகளின் பிரச்சனையாக இருந்த பூனையும் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டது. 25 |
இந்த கதையின் அர்த்தம், பல முடிவுகள் பேசுவதற்கு இலகுவாக இருந்தாலும் செயலில் இலகுவானதல்ல. 26 ★ |
 |